பாடசாலை, பல்கலைக்கழகங்களில் பாதுகாப்பு நடவடிக்கை ஆரம்பம்!

Thursday, May 2nd, 2019

பாடசாலை மற்றும் பல்கலைக்கழகங்களில் பாதுகாப்பை உறுதிப்படுத்த சகல நடவடிக்கைகளும் இன்று(02) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கை எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ள நிலையில், இதற்கு முன்னதாக முறையான பாதுகாப்பு வழங்குவது பற்றி முப்படைத் தளபதிகள், பதில் பொலிஸ்மா அதிபர் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் கூறினார்.

பாடசாலைகளில் பாதுகாப்பை மேலும் உறுதிப்படுத்துவது தொடர்பான விசேட சுற்றுநிருபம் கடந்த வாரம் வெளியிடப்பட்டது.

Related posts: