பாடசாலை தவணை ஆரம்பிப்பதற்கு முன்னா் விசேட டெங்கு ஒழிப்பு திட்டத்தினை முன்னெடுங்கள் – துறைசார் தரப்பினருக்கு கல்வி அமைச்சா் சுசில் பிரேமஜயந்த வலியுறுத்து!
Friday, June 9th, 2023நாட்டில் அதிகரித்துவரும் டெங்கு தாக்கத்தினையடுத்து பாடசாலை தவணை ஆரம்பிப்பதற்கு முன்னா் விசேட டெங்கு ஒழிப்பு திட்டத்தினை முன்னெடுக்கவுள்ளதாக கல்வி அமைச்சா் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் நாட்டின் அனைத்து மாகாணங்களையும் உள்ளடக்கியவாறு இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அவா் குறிப்பிட்டுள்ளார்.
முன்பனதாக கொழும்பில் உள்ள 144 பாடசாலைகளை உள்ளடக்கியவாறு மாதிரி டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் ஒன்று இந்த வார இறுதியில் நடைமுறைப்படுத்தப்படும் என அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
0000
Related posts:
PHI கெடுபிடி : உள்ளூர் உற்பத்திகள் முடக்கம் - உற்பத்தியார்கள் பெருங் கவலை!
குற்றச்செயல்களில் இருந்து நாட்டை விடுவித்து மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவதில் பொலிஸாருக்கு முக்...
இரத்மலானை விமான நிலைய பிரவேச வீதியை துரிதமாக அபிவிருத்தி செய்ய ஆலோசனை!
|
|