பாடசாலை செல்லாத மாணவர்களுக்கு சிறப்பு கொடுப்பனவு!
Thursday, October 12th, 2017
இலங்கையில் வறுமை காரணமாக பாடசாலை செல்லாத மாணவர்களுக்கு மாதம்தோறும் சிறப்பு கொடுப்பனவு வழங்குவதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ் பாடசாலைக்கு சமூகமளிக்கும் மாணவர்களுக்கு நாளொன்றுக்கு ரூபாய் 100 வீதம் மாதாந்த கொடுப்பனவு வழங்குவது தொடர்பாக உத்தேசித்துள்ளதாக கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் கூறியுள்ளார்.
அடுத்த வருடம் நடைமுறைப்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ள இந்த திட்டத்தின் மூலம் மாணவர்கள் இடை விலகல் தடுக்கப்படுவது மட்டுமன்றி, அவர்களின் கல்வி ஆர்வத்தையும் அதிகரிக்க முடியும் என கல்வி அமைச்சு நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
Related posts:
நாடு முழுவதும் உள்ள நீதிமன்றங்களுக்கு வெள்ளிக்கிழமை முதல் விடுமுறை!
சிரேஷ்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் வழிகாட்டுதலில் வேலைத்திட்டங்களை முன்கொண்டு செல்லும் ஆர்வத்துடன...
இலங்கையில் கஞ்சா பயிரிட அனுமதி - இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவிப்பு!
|
|
|


