பாடசாலை சீருடை துணிகளை மாணவர்களுக்கு நேரடியாக வழங்குவதற்கு அரசு தீர்மானம்!
Thursday, June 11th, 2020
பாடசாலை சீருடை கூப்பனுக்கு பதிலாக அடுத்த ஆண்டுமுதல் பாடசாலை மாணவர்களுக்கு மீண்டும் இலவச சீருடைகளை வழங்க அரசு தீர்மானித்துள்ளது.
கடந்த அரசின் ஆட்சி காலத்தில் பாடசாலை சீருடை வழங்குவதற்கு பதிலாக சீருடை கூப்பன்களே வழங்கப்பட்டு வந்தது.
இதனடிப்படையில் சீருடை கூப்பன்களை கடைகளில் கொடுத்து பாடசாலை சீருடை துணிகளை மாணவர்கள் பெற்றுவந்தனர்.
இந்நிலையில் அந்த முறையை மாற்றி மீண்டும் பழையமுறைப்படி பாடசாலை சீருடை துணிகளை மாணவர்களுக்கு நேரடியாக வழங்குவதற்கு அரசு தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
புதிய பாதுகாப்பு செயலாளராக முன்னாள் இராணுவ தளபதி நியமனம்!
சமுர்த்தி பயனாளிகளுக்கு பத்தாயிரம் ரூபா நிவாரண நிதி – முதற்கட்ட நடவடிக்கைகள் ஆரம்பம்!
அஞ்சல் திணைக்களத்தின் செயற்பாடுகள் அனைத்தும் வழமைக்குத் திரும்பியது - யாழ்ப்பாண பிரதம தபாலக அதிபர் த...
|
|
|


