பாடசாலைகளை திறப்பது தொடர்பில் கல்வி அமைச்சர் எடுத்துள்ள தீர்மானம்!
Sunday, April 19th, 2020எதிர்வரும் மே மாதம் 11 ஆம் திகதி பாடசாலைகளை திறப்பது குறித்து திடமான தீர்மானங்களை எடுக்க முடியவில்லை என கல்வி அமைச்சர் டலஸ் அழப்பெரும தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் 12 ஆம் திகதி முதல் நாட்டின் அனைத்து பாடசாலைகளும் மூடப்பட்டன. இதன்போது ஏப்ரல் 20 ஆம் திகதி வரையில் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டிருந்தன.
எனினும் நாட்டில் தற்போது உள்ள கொரோனா வைரஸ் தொற்று நிலையை கருத்தில் கொண்டு பாடசாலைகளை திறக்கும் திகதி மே மாதம் 11ஆம் திகதிக்கு பிற்போடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கொரோனா நோய் தொற்று நிலைமையை கருத்திற் கொண்டே பாடசாலைகளை திறப்பது பற்றி தீர்மானிக்கப்படும் என்பதுடன் பாடசாலைகளை திறப்பது தொடர்பில் சுகாதாரத்துறையினரின் பூரண அனுமதியுடன் தீர்மானங்கள் எடுக்கப்படும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
Related posts:
தடையாக இருப்பது யாரானாலும் நடவடிக்கை - கபீர் ஹாஷிம்!
10 பாடங்களைச் சேர்ந்த ஆசிரியர்களுக்கு 21 நாள்கள் முன்சேவைப் பயிற்சி !
உள்ளூராட்சித் தேர்தல் குறித்து நீதித்துறையே முடிவு செய்ய வேண்டும் - தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவிப்பு!
|
|