பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கான சுகாதார வழிகாட்டல்கள் சிலவற்றில் மாற்றம் செய்ய நேரிடலாம் – என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவிப்பு!

Wednesday, October 13th, 2021

பாடசாலைகள் ஆரம்பிக்கப்படும்போது, தற்போது வெளியிடப்பட்டுள்ள சில சுகாதார வழிகாட்டல்களில் மாற்றம் மேற்கொள்ளப்பட வேண்டி ஏற்படும் என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ள அவர் மேலும் கூறுகையில் –

பாடசாலைகள் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர், அந்த செயற்பாடுகள் உரியவாறு முன்னெடுக்கப்படுகின்றதா? என்பது குறித்து பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள், முன்கூட்டிய நடவடிக்கை மேற்கொண்டால் அது தவறில்லை என தாம் கருதுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் மாணவர்கள் செயற்பட வேண்டிய முறைமை குறித்து தெளிவுபடுத்த வேண்டும். இதற்கமைய, சுகாதார அமைச்சினால், கல்வி அமைச்சுக்கு விசேட வழிகாட்டல் கோவை வழங்கப்பட்டுள்ளதாகவும் பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:

கற்பித்தல் நேர அட்டவணை மாற்றத்துடன் எதிர்வரும் 29 ஆம் திகதிமுதல் அனைத்து பாடசாலைகளும் மீண்டும் வழமைக...
நியூ டயமன்ட் கப்பல் தீப்பரவல் சம்பவம் - இரண்டு வருடங்களின் பின்னர் வழக்கு தொடர கடல்சார் சூழல் பாதுகா...
இலங்கைக்கான கடன் நிவாரணத் திட்டத்தில் இணைந்து கொள்ளும் முக்கிய நாடுகள் - இந்திய நிதி அமைச்சர் நிர்மல...