பாடசாலைகளுக்கு மாணவர்களை அனுப்பவேண்டாம் – கல்வி அமைச்சு அதிரடி உத்தரவு!
Monday, May 21st, 2018தற்போது தென் மாகாணத்தில் பரவிவரும் வைரஸ் நோய் காரணமாக மாகாண கல்வி அமைச்சு பெற்றோர்களுக்கு சிறப்பு அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது.
இதன்பிரகாரம் மாணவர்களுக்கு காய்ச்சல் மற்றும் தடிமல் காணப்படுமாயின் , அவர்களை பாடசாலைக்கு அனுப்ப வேண்டாம் என மாகாண கல்வி அமைச்சு பெற்றோருக்கு அறிவித்துள்ளது.
இதேவேளை, பரவிவரும் நோய் தொடர்பில் நாளைய தினம தொற்று நோய் பிரிவு குழுவொன்று குறித்த பகுதிகளில் தளஆய்வினை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தற்போது நாட்டின் பல பாகங்களிலும் மழை பெய்து வருவதால் காய்ச்சல் மற்றும் தொற்று நோய் பரவக் கூடிய நிலையும் ஏற்பட்டுள்ளது.
Related posts:
நாட்டிலுள்ள சிறுநீரக நோயாளர்களது தொகை மதிப்பீடு!
எந்த அச்சுறுத்தலுக்கும் முகம்கொடுக்க தயார் - இராணுவத் தளபதி!
இலங்கையில் அவசரநிலையைப் பிரகடனம் செய்யவும் - மருத்துவர்கள் அவசர கோரிக்கை!
|
|