பாடசாலைகளில் தனியார் புத்தகங்கள் விற்கத் தடை!

Wednesday, March 6th, 2019

வட மாகாண பாடசாலைகளில் நிறுவனங்களின் புத்தகங்கள் மற்றும் வெளியீடுகள் நேரடியாக விற்பனை செய்யப்படுவது முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது என்று வடக்கு மாகாண கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இது தொடர்பான சுற்றறிக்கை கல்வி சார்ந்த சகல உயர் அதிகாரிகளுக்கும் கல்வி அமைச்சால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.

வட மாகாண பாடசாலைகளில் பல்வேறு நிறுவனங்களின் வெளியீடுகள், புத்தகங்கள் விற்பனை செய்யப்படுகிறன.

இது பாடசாலைகளில் அதிகமாக நடைபெறுகிறது. இந்த வெளியீடுகள் சில வேளைகளில் பாட பரப்புக்கு மேலதிகமாக மாணவர்களுக்கு சுமையாகவும் அமைகிறது. கல்வி அமைச்சு ஆசிரியர் கைநூல் உட்பட்ட அனைத்து புத்தகங்களையும் மாணவர்களின் கல்வி மட்டத்துக்கு ஏற்ப அச்சிட்டு வெளியிடுகிறது. சில பாடசாலைகளில் இந்த வெளியீட்டு நிறுவனத்தின் புத்தங்கங்களை வாங்குமாறு சிலர் மாணவர்களுக்கு தெரிவிக்கின்றனர்.

கல்வி அமைச்சு கல்வி திணைக்களத்தால் போதியளவு பயிற்சி மீட்டல்கள், பரீட்சைக்கு தயார் படுத்தல் வினாக்கள் போன்றன வெளியீடு செய்யப்படுகின்றன. இவை மாணவர்களுக்கு போதுமானதாக அமைகிறது.

ஆகவே வட மாகாண பாடசாலைகளில் அரசால் வெளியிடப்படும் வெளியீடுகளை தவிர நிறுவனங்களால் வெளியிடப்படும் புத்தகங்கள் மற்றும் வெளியீடுகள் நேரடியாகப் பாடசாலைகளில், முன்பள்ளிகளில் விற்பனை செய்யப்படுவது தடை செய்யப்படுகிறது. இந்த நடவடிக்கை உடனடியாக நடைமுறைக்கு வருகின்றது என்று தெரிவிக்கப்பட்டது.

Related posts: