பழங்களுக்கான வரியை அதிகரிக்க நடவடிக்கை!

Thursday, June 14th, 2018

இறக்குமதி செய்யப்படும் பழங்களுக்காக அறவிடப்படும் வரியை அதிகரிப்பதற்கு விரைவில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

அத்துடன் இறக்குமதி செய்யப்படும் உரங்களுக்கும் அதிக வரிகளை அறவிட நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றன.

இறக்குமதி செய்யப்படும் பழங்களுக்கு அதிகூடிய வரியை அறவிடுவது தொடர்பான அறிவிப்பு குறைந்தது ஒரு வார கால பகுதியில் விடுக்கப்படும்.

உள்நாட்டு உற்பத்திகளை ஊக்குவிக்கும் நோக்கிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

Related posts:


உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் பெயர் விபரங்களை அச்சிடும் பணிகள் ஆரம்பம் - அரசாங்க அச்சுத் திணைக்கள...
அவசர அழைப்பு இலக்கத்தை அநாவசியமாக பயன்படுத்த வேண்டாம் – பொதுமக்களிடம் பொலிஸ் ஊடகப் பெச்சாளர் வலியுறு...
பாடசாலைகளை மீண்டும் திறப்பதற்கான வழிகாட்டல்கள் சில வாரங்களில் வெளியாகும் - கல்வி அமைச்சர் தினேஷ் கு...