பல்வேறு மோசடி சம்பவங்கள் – மாதாந்தம் 100 பேருந்து நடத்துனர்கள் பணியிலிருந்து இடைநிறுத்தப்படுவதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவிப்பு!
Monday, September 18th, 2023பல்வேறு மோசடி சம்பவங்கள் காரணமாக மாதாந்தம் 100 பேருந்து நடத்துனர்கள் பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.
இதன்காரணமாக அவர்களுக்கு பதிலீடாக புதிய பேருந்து நடத்துனர்களை சேவையில் இணைத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.
அதற்கமைய, 381 பேருந்து நடத்துனர்களை புதிதாக சேவையில் இணைத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அந்த சபையின் தலைவர் லலித் டி அல்விஸ் தெரிவித்துள்ளார்.
அதேநேரம், புதிதாக 912 பேருந்து சாரதிகளையும் புதிதாக சேவையில் இணைத்துக்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
000
Related posts:
பல்கலைக்கழக நுழைவிற்கான விண்ணப்பங்கள் வெளியீடு!
பனம் பொருளிலான உற்பத்திகளுக்கு பயிற்சிகள் வழங்க பனை அபிவிருத்திச் சபை நடவடிக்கை !
தேசிய விளையாட்டு பேரவையின் தலைவராக மஹேல ஜயவர்தன நியமனம்!
|
|