பல்கலை மாணவர்கள் படுகொலை: பொலிஸாரின் மனு நிராகரிப்பு!

Friday, September 8th, 2017

கொக்குவில் குளப்பிட்டிச் சந்திப் பகுதியில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பொலிஸாரின் பிணை மனுவை யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

குறித்த பொலிஸார் சார்பில் அவர்களின் உறவினர்களால் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனு மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன் முன்னிலையில் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது.

மாணவர்கள் மீதான துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இது தொடர்பான அறிக்கையொன்றினைப் பெற வேண்டியுள்ளதாக அரச தரப்புச் சட்டத்தரணி மன்றில் விண்ணப்பம் செய்தார். அவரது விண்ணப்பத்தினை இதன் போது நீதவான் ஏற்றுக் கொண்டதுடன், பிணை மனு தொடர்பான விசாரணையை எதிர்வரும்-14 ஆம் திகதிக்குத் தவணையிட்டார்.

Related posts: