பல்கலை மாணவர்கள் சுட்டுக் கொலை: பொலிஸாருக்கு பிணை வழங்கினார் இளஞ்செழியன்!

Thursday, September 14th, 2017

குளப்பிட்டி பகுதியில் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் உயிரிழந்த சம்பவத்தில்சந்தேகத்தின் பேரில்கைது செய்யப்பட்ட 5பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கும் பிணை வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான வழக்கு விசாரணைகள் இன்று(14) யாழ்.மேல் நீதிமன்றில் நடைபெற்றது.இதன்போதே ஐவருக்கும் பிணை வழங்கியாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பொலிஸ் அதிகாரிகள் சார்பில் அவர்களின் உறவினர்களால் யாழ்.மேல் நீதிமன்றத்தில் தாக்கல்செய்யப்பட்ட பிணை மனு மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன் முன்னிலையில் கடந்த 06ஆம் திகதி விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன் போது மாணவர்கள் மீதான துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் மேலதிகவிசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இது தொடர்பான அறிக்கையொன்றினைப் பெற வேண்டியுள்ளதாக அரசதரப்புச் சட்டத்தரணி மன்றில் விண்ணப்பம் செய்தார். அவரது விண்ணப்பத்தினை ஏற்றுக் கொண்ட நீதிபதி பொலிஸ் அதிகாரிகளின்பிணை மனுவை நிராகரித்திருந்தார். இந்த நிலையில் பிணை மனு தொடர்பான விசாரணையை இன்றைய தினத்திற்குத்தவணையிட்டிருந்த நிலையிலேயே ஐந்து பொலிஸ் அதிகாரிகளையும் பிணையில் செல்வதற்கு அனுமதியளித்துள்ளார்.
கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் 20ஆம் திகதி குளப்பிட்டி பகுதியில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி பல்கலைக்கழகமாணவன் ஒருவர் உயிரிழந்ததுடன்இ மற்றொரு மாணவன் விபத்தில் பலியாகி இருந்தார். இந்த சம்பவம் நடைபெற்ற சந்தர்ப்பத்தில்கடமையில் இருந்த ஐந்து பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைது செய்யப்பட்டுஇ கடந்த 11 மாதங்களாக தொடர்ச்சியாக அநுராதபுரம்சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில் இன்று இவர்களுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளதாகதெரிவிக்கப்படுகின்றது. மேலும்இ குறித்த சம்பவத்தில் யாழ்.பல்கலைக்கழக அரசறிவியல்துறை மாணவனான கஜன் (வயது 23) மற்றும்ஊடகக்கற்கை மாணவனான சுலக்சன் (வயது 24) ஆகிய இரு மாணவர்கள் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது

Related posts: