பல்கலை மாணவர்களுக்கு வட்டியில்லா கடனில் மடிக்கணனிகள்!
Thursday, May 12th, 2016
2016 ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்ட யோசனைகளுக்கு அமைவாக பல்கலைக்கழக மாணவர்களுக்கு வட்டியில்லா கடன் அடிப்படையில் மடிக்கணனிகளை வழங்குவதற்கு உயர் கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
இதனடிப்படையில் 3 வருடங்களுக்கு இந்த கடன் வழங்கப்படவுள்ளதாக உயர் கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் பி.ஜீ ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
இந்த நடவடிக்கைகள் இன்னும் 2 வாரங்களுக்குள் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் இதற்கான 2 வங்கிகளை தெரிவு செய்துள்ளதாகவும் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.
பல்கலைக்கழகத்திற்கு அருகிலுள்ள வங்கிக் கிளைகளூடாகவே இந்த கடன்கள் வழங்கப்படவுள்ளதாகவும் உயர் கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் பி.ஜீ ஜயசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.
Related posts:
எமக்கு எதுவித தொடர்பும் கிடையாது - வேலணை பிரதேச சபையிடம் தன்னார்வத் தொண்டு அமைப்புக்கள் விளக்கம்!
யாழ். பல்கலையில் இந்து கற்கைகளுக்கென தனி பீடம்!
ரவிராஜ் படுகொலை: பொய்யான சாட்சிகளை தயாரிக்குமாறு முன்னாள் பிரதமர் ரணில் குற்றப்புலனாய்வு திணைக்களத்...
|
|
|
தேங்காய் எண்ணெய் கொள்கலன் தொடர்பான விசாரணைகள் நிறைவு - சுங்கப்பிரிவின் பேச்சாளர் சுதத்த சில்வா!
எந்தவொரு ஊழியரினதும் சம்பளத்தையும் குறைப்பதற்கான எண்ணம் அரசாங்கத்திற்கு கிடையாது - அமைச்சர் டளஸ் அழ...
உலக நாடுகளுக்கு விநியோகிக்கப்படும் எரிவாயுவிற்காக அந்நாடுகள் ரஷ்ய நாட்டு பணமான ரூபிளில் மட்டுமே கட்ட...


