உலக நாடுகளுக்கு விநியோகிக்கப்படும் எரிவாயுவிற்காக அந்நாடுகள் ரஷ்ய நாட்டு பணமான ரூபிளில் மட்டுமே கட்டணத்தை திரும்பச்செலுத்த வேண்டும் – ரஷ்ய ஜனாதிபதி புட்டினின் அதிரடி முடிவு!
Thursday, March 24th, 2022ரஷ்யாவால் உலக நாடுகளுக்கு விநியோகிக்கப்படும் எரிவாயுவிற்காக அந்த நாடுகள் செலுத்தும் கட்டண தொகையை இனிமேல், ரஷ்ய நாட்டு பணமான ரூபிளில் மட்டுமே கட்டணத்தை திரும்பச்செலுத்த வேண்டும் டொலர் அல்லது யூரோ போன்ற வெளிநாட்டு பணத்தை பயன்படுத்தி கட்டணத்தை செலுத்தகூடாது என்று ரஷ்ய ஜனாதிபதி புட்டின் தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவின் கோபத்திற்கு ஆளாகியுள்ள அதன் மீது பொருளாதர தடைகள் விதித்த மேற்கத்திய நாடுகள் உள்ளிட்ட நாடுகளுக்கு இந்த முறை பொருந்தும். ரஷ்யாவின் நட்பு நாடுகள் பழைய முறையிலேயே கட்டணத்தை செலுத்தலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இதுதொடர்பாக நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் இந்த முடிவை அவர் அறிவித்தார்.
அப்போது அவர் கூறியதாவது,
“எங்கள் எரிவாயு விநியோகத்திற்கான கட்டணத்தை மாற்றுவதற்கு சில நடவடிக்கைகளை செயல்படுத்த முடிவு செய்துள்ளேன். அதன்படி, ரஷ்யாவிடம் தோழமை அல்லாத நாடுகள் தாங்கள் செலுத்தும் கட்டண தொகையை இனிமேல், ரஷ்ய நாட்டு பணமான ரூபிளில் மட்டுமே திரும்பச்செலுத்த வேண்டும். டொலர் அல்லது யூரோ போன்ற வெளிநாட்டு பணத்தை பயன்படுத்தி கட்டணத்தை செலுத்தகூடாது.
எனினும், ரஷ்யா தனது ஒப்பந்தங்களில் குறிப்பிடப்பட்டுள்ள எரிவாயு அளவை தொடர்ந்து உலக நாடுகளுக்கு வழங்கும்.
புதிய கட்டண முறையை ஒரு வாரத்திற்குள் அமல்படுத்துமாறு ரஷ்யாவின் மத்திய வங்கியை கேட்டுகொள்கிறேன்.
இது வெளிப்படையாகவும் ரஷ்யாவின் உள்நாட்டு சந்தையில் ரூபிள் வாங்குவதை உள்ளடக்கியதாகவும் இருக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.
உக்ரேன் மீது போர் தொடுத்துள்ள ரஷியா, அதன்மீது உலக நாடுகள் விதித்த சமீபத்திய பொருளாதாரத் தடைகளால் பாதிக்கப்பட்டது உக்ரேன் மோதலின் தொடக்கத்தில் இருந்து சரிந்து வந்து ரஷ்ய பணமான ரூபிளின் மதிப்பு, இப்போது யூரோ மற்றும் டாலருக்கு எதிராக வலுப்பெற்றது.
புட்டின் இந்த அறிவிப்பை தொடர்ந்து, ரஷ்ய விண்வெளி நிறுவனமான ரோஸ்கோஸ்மோஸ், தனது சர்வதேச கூட்டாளிகள் விண்வெளி ஒப்பந்தம் தொடர்பான தொகையை இனி ரூபிளாக தான் செலுத்த வேண்டும் என்று அறிவித்தது.
“ரூபிளை வலுப்படுத்தும்” ரஷ்யாவின் முயற்சிகளை உக்ரைன் உடனடியாகக் கண்டனம் செய்ததுள்ளது குறிப்பிடத்தக்கது.
உக்ரேன் போருக்கு பதிலடியாக, மேற்கத்திய நாடுகள் வெளிநாடுகளில் உள்ள ரஷ்யாவின் சுமார் 300 பில்லியன் டொலர் வெளிநாட்டு நாணய இருப்புக்களை முடக்கியுள்ளன. இந்த நடவடிக்கையை ரஷ்யாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் திருட்டு என்று வர்ணித்தது குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|