பல்கலை அனுமதி விண்ணப்பத்திற்கு பாடசாலை அதிபரின் சான்றிதழ்கள் தேவையில்லை – பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் அறிவிப்பு!
Monday, May 24th, 2021
பயணக் கட்டுப்பாடுகள் காரணமாக பல்கலைக்கழக அனுமதிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரிகள், விண்ணப்பம் கோரும் பாடசாலையிலிருந்து எந்த ஆவணங்களையும் சமர்ப்பிக்க தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று திங்கட்கிழமை காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க இதனைத் தெரிவித்துள்ளார்.
அத்துடன் விண்ணப்பதாரர்கள் தேவையான ஆவணங்களை மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும் என்றும் பாடசாலை அதிபரின் சான்றிதழ்கள் தேவையில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்..
அத்தோடு விண்ணப்பத்தில் கோரப்பட்டுள்ள கிராம அலுவலகரின் சான்றிதழ்களை தனியார் விண்ணப்பதாரர்கள் பெற வேண்டிய அவசியமில்லை என்றும் பேராசிரியர் சம்பத் அமரதுங்க அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
மக்கள் அதற்கு கட்டுப்பட்டு நடக்கவில்லை எனின் சட்டங்கள் மீண்டும் கடுமையாக்கப்படும் – சுகாதார சேவைகள் ...
மூன்றாவது அலை மிக மோசமான விளைவுகளுடன் ஆரம்பம் – கட்டுப்படுத்த நாட்டு மக்கள் உச்ச அளவு ஒத்துழைப்பை வழ...
முதலாம் தரத்துக்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான விண்ணப்படிவம் வெளியீடு!
|
|
|
எரிபொருள் விநியோகத்தின் போது பொதுப்போக்குவரத்துக்கு முன்னுரிமை வழங்குங்கள் - தனியார் பேருந்து உரிமை...
வெளிநாட்டு முதலீடுகள் தொடர்பில் கவனம் செலுத்துவது அவசியமானது - கைத்தொழில்துறை அமைச்சர் எஸ்.பி.திஸாநா...
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மீன்பிடி உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ஜப்பான் 200 மில்லியன் ...


