பலாலி விமான நிலையத்தின் ஓடுபாதையை விஸ்தரிப்பு – பயணிகள் முனையத்தையும் விரிவுபடுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானம்!

Tuesday, June 20th, 2023

பலாலி விமான நிலையத்தின் ஓடுபாதையை விஸ்தரிப்பதற்கும் பயணிகள் முனையத்தை விரிவுபடுத்துவதற்கும் அரசாங்கத்தினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தற்போது காணப்படும் 900 மீட்டர் ஓடுபாதையை புனரமைத்து, புதிதாக 300 மீட்டர் ஓடுபாதையை இணைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.

அத்துடன் இதற்காக 168 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்..

தற்போதுள்ள சிறிய பயணிகள் முனையத்தில் நிலவும் இடப்பற்றாக்குறையால் சுற்றுலாப் பயணிகளுக்கு ஏற்படும் அசௌகரியங்களைத் தவிர்ப்பதே இதன் நோக்கம் என துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

Related posts:


அரசாங்கம் விருப்பத்துடன் கட்டுப்பாடுகளை விதிக்கவில்லை - கொரோனாவுடன் போராடும் அதேவேளை, அபிவிருத்திகள...
உலகளாவிய தெற்கு உச்சிமாநாட்டில் பங்கேற்கும் நோக்கில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்தியா பயணம்!
சீன கமியூனிஸ்ட் கட்சியின் அரசியல் குழு உறுப்பினர் யுவான் ஜியாஜூன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சந்திப்...