பலஸ்தீனம் இலங்கை இடையே மருந்துவ உடன்படிக்கை!

Monday, April 24th, 2017

பலஸ்தீனம் மற்றும் இலங்கைக்கு இடையில் மருந்து இறக்குமதி தொடர்பான உடன்படிக்கையில் கையெழுத்திட உள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதன் அடிப்படையில் எதிர்வரும் ஒக்டோபரில் அந்த உடன்படிக்கையில் கையெழுத்திட உள்ளதாக சுகாதார அமைச்சு மேலும் கூறியுள்ளது.

பலஸ்தீனத்தின் ஆசியா, ஆபிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா வலயங்களுக்கான ஒத்துழைப்பு அமைச்சர் மசேன் சாமயாஹ் உள்ளிட்ட பலஸ்தீன நாட்டின் பிரதிநிதிகள் குழு சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவை நேற்று முன்தினம் சந்தித்தபோது இந்த உடன்படிக்கை தொடர்பில் பேசப்பட்டுள்ளது.

பலஸ்தீன நாட்டின் மருந்து தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்படுகின்ற ஜக்கிய அமெரிக்காவினாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள பலஸ்தீனப் பிரதிநிதிகள் இதன் போது கூறியுள்ளனர். இந்த மருந்த தயாரிப்புகள் தொடர்பில் தேடிப் பார்ப்பதற்காக பலஸ்தீனத்துக்கான விஜயம் ஒன்றை மேற்கொள்ளுமாறு சுகாதார அமைச்சருக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

Related posts: