பரந்தனில் வாகன விபத்து ; இளைஞன் ஒருவர் பரிதாப பலி!
Saturday, May 19th, 2018
பரந்தன் – பூநகரிக்கு இடைப்பட்ட பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞன் உயிரிழந்துள்ளார்.
வடக்கு மாகாண திணைக்களத்தில் பணியாற்றும் 35 வயதான கோபாலபிள்ளை குகன் என்ற இளைஞனே குறித்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
வேலணையைச் சொந்த இடமாகவும் யாழ்ப்பாணம், ஆத்திசூடி பகுதியை சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். வடக்கு மாகாண கல்வித் திணைக்களத்தின் பிக்கப் வாகனத்தின் சில்லு ஒன்று காற்றுப் போனதால் கட்டுப்பாட்டையிழந்தமையால் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
வடக்கு மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவால் இன்று நடத்தப்படவுள்ள முகாமைத்துவ உதவியாளர் போட்டிப் பரீட்சைக்கான கடமைக்கு உத்தியோகத்தர்கள் பயணித்த போதே விபத்து இடம்பெற்றது. விபத்தில் காயமடைந்த மேலும் நான்கு பேர் கிளிநொச்சி வைத்தியசாலை சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Related posts:
மணியம்தோட்டம் சனசமூக நிலையத்திற்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியல் அலுவலக தளபாடங்கள் வழங்கிவைப்பு!
அரச நிறுவனங்களின் தலைவர்களது கொடுப்பனவை கட்டுப்படுத்த விசேட வர்த்தமானி அறிவிப்பு!
6.2 மில்லியன் அமெரிக்க டொலர்களை மீளப்பெறுவதற்கு சீன அரசாங்கத்துடன் இலங்கை வெளிவிவகார அமைச்சு மீண்டும...
|
|
|


