பயங்கரவாத தாக்குதலை மேற்கொண்ட நபர் இலங்கையர் என்பதில் கவலையடைகிறோம் – அமைச்சர் தினேஷ் தெரிவிப்பு!
Tuesday, September 7th, 2021நியூசிலாந்தில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலை மேற்கொண்ட நபர் இலங்கையைச் சேர்ந்தவர் என்பதில் கவலையளிப்பதாக கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் அவசரகால சட்ட ஒழுங்குவிதிகள் நிறைவேற்றும் வகையில் இடம்பெற்ற விவாதத்தில் உரையாற்றிய அவர், இந்த தாக்குதலை அரசாங்கம் வன்மையாக கண்டிப்பதாகவும் கூறியிருந்தார்.
மேலும் இந்த தாக்குதலால் நியூசிலாந்து அரசாங்கதிற்கும் அந்நாட்டு மக்களுக்கும் ஏற்பட்டுள்ள கவலையில் இலங்கை அரசாங்கம் பங்கெடுப்பதாகவும் அமைச்சர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
இதேநேரம் சர்வதேச ரீதியாக மீண்டும் பயங்கரவாத செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தினேஷ் குணவர்த்தன இதன்போது மேலும் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
எதிர்வரும் 3 நாட்களில் எரிபொருள் தட்டுப்பாட்டு நிலை வீழ்ச்சியடையும் - எரிபொருள் தாங்கி ஊர்தி உரிமையா...
அவுஸ்ரேலியாவிற்கு சட்டவிரோதமாக குடியேற முயற்சித்த 41 இலங்கையர்கள் நாடு திரும்பினர் - 37 பேருக்கு பி...
கிராம புறங்களிலுள்ள பாடசாலைகள் வழமை போன்று நடைபெறும் - பாடசாலை நடவடிக்கைகளை முன்னெடுப்பது தொடர்பிலும...
|
|