பயங்கரவாதிகளால் தேவாலயங்களுக்குள் கொல்லப்பட்டவர்கள் தியாகிகளாக அறிவிப்பு!

ஈஸ்டர் ஞாயிறன்று பயங்கரவாதிகளால் தேவாலயங்களுக்குள் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்கள் தியாகிகளாக பிரகடனம் செய்யப்படவுள்ளனர்.
கத்தோலிக்க திருச்சபையின் கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் இதனை தெரிவித்துள்ளார்.
பொரளையில் உள்ள தேவாலயத்தில் நேற்று நடத்திய சிறப்பு பிரார்த்தனையில் கர்தினால் மல்கம் ரஞ்சித் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
“சமயம் என்பது வாழ்க்கை. தமது சமய நம்பிக்கையினாலேயே இவர்கள் கொல்லப்பட்டார்கள், தாக்குதல்களை மேற்கொண்டவர்களுக்கு, வாழ்க்கையின் பெறுமானம் தெரியவில்லை” என்றும் கர்தினால் மல்கம் ரஞ்சித் குறிப்பிட்டார்.
Related posts:
சகல நெற்காணிகளுக்கும் இலவச பயிர் காப்புறுதி!
இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு!
காணி மற்றும் காவல்துறை அதிகாரங்கள் தவிர்ந்த ஏனைய அனைத்து அதிகாரங்களும் மாகாண சபைகளுக்கு வழங்கப்பட வே...
|
|