பயங்கரவாதத் தாக்குதலின் எதிரொலி – சிங்கராஜ வனத்தின் வருமானத்தில் வீழ்ச்சி!

Tuesday, May 28th, 2019

நாட்டில் கடந்த ஏப்ரல் மாதம் 21ம் திகதி மேற்கொள்ளப்பட்ட தீவிரவாதத் தாக்குதலை தொடர்ந்து சிங்கராஜ வனத்தைப் பார்வையிட வருகின்ற சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக, சிங்கராஜவன பரிபாலன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சாதாரண மாதமொன்றில் 1,500 – 2,000 வரையான சுற்றுலாப் பயணிகள் சிங்கராஜ வனத்திற்கு வருகை தருகின்ற நிலையில் குறித்த தாக்குதலுக்கு பின்னர் இதுவரையில் 165 பேரே சிங்கராஜ வனத்தைப் பார்வையிட வருகை தந்ததாகவும் குறித்த அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Related posts: