மேலும் 101 கொரோனா மரணங்கள் பதிவு – உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை இரண்டாயிரத்தைக் கடந்தது!

Friday, June 11th, 2021

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் மேலும் 101 பேரின் மரணங்கள் பதிவாகியுள்ளமை குறித்த உறுதிப்படுத்தல் அறிக்கை வெளியாகியுள்ளது.

இதன்படி இலங்கையில் இதுவரையில் கொரோனா தொற்றினால் 2011 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்பு பணிமனை அறிவித்துள்ளது.

இதேநேரத்தில் இதுவரை காலத்தில் இலங்கையில் ஒரே சமயத்தில் பதிவான அதிகூடிய கொவிட் மரண எண்ணிக்கை இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

Related posts: