பதவிக் காலத்தின் இரண்டு ஆண்டுகளை பூர்த்திசெய்தார் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ!

Thursday, November 18th, 2021

ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ தெரிவு செய்யப்பட்டு இன்றுடன் இரண்டாவது ஆண்டு பூர்த்தியாகின்றது.

2019 ஆம் ஆண்டு நவம்பர் 16 ஆம் திகதி இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளரான கோட்டாபய ராஜபக்ஷ, இலங்கையில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட 8 ஆவது ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார்.

தேர்தலில் அவர் 52.25 சதவீத வாக்குகளைப் பெற்று தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச நவம்பர் மாதம் 18 ஆம் திகதி மஹிந்த ராஜபக்ஸவின் பிறந்த தினத்தில் அநுராதபுரத்தில் அவர் ஜனாதிபதியாக பதவிப்பிரமாணம் செய்துக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts: