காணாமல் ஆக்கப்பட்டவர்களை பாதுகாக்கும் சட்டமூலம் வர்த்தமானியில்!

Wednesday, February 15th, 2017

காணாமல் ஆக்கப்பட்ட அனைவரையும் பாதுகாப்பதற்கான , பிரதமர் ரணில் விக்ரம சிங்கவின் உத்தரவின் பேரில் வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.

குறித்த சாசனத்தை வர்த்தமானியில் வெளியிடுவதற்கு கடந்த ஏழாம் திகதி அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியதாக வெளி விவகார அமைச்சர் மங்கள சமரவீர கூறியுள்ளார். எவ்வாறாயினும் குறித்த சட்டமூலம், சட்டமாக ஆக்கப்படுவதற்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை பெற வேண்டும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கடந்த 2016 ஆம் ஆண்டு மே மாதம் பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்ட அனைவரையும் பாதுகாப்பதற்கான சர்வதேச சாசன த்தை  அரசாங்கம் ஏற்றுக்கொண்டிருந்தது. இந்த சாசனத்தின் பிரகாரம்  பலவந்தமாக காணாமல் ஆக்கப்படுகின்றமை குற்றவியல் குற்றமாக உள்ளுர் சட்டமாக கொண்டுவர வேண்டிய கடப்பாடு இலங்கைக்கு உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்துடன் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாதுகாப்பை வழங்க வேண்டும் எனவும் குறிப்பிட ப்பட்டுள்ளது. இலங்கையில் இடம்பெற்ற இரண்டு கிளர்ச்சி செயற்பாடுகள் மற்றும் உள்நாட்டு யுத்தம் காரணமாக 65 ஆயிரம் பேர் வரை காணா மற் போயுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சர்வதேச கடப்பாடுகளை நிறைவேற்றும் ஓர் நடவடிக்கையாக காணாமல் ஆக்கப்படுகின்றமை குற்றவியல் குற்ற மாக்கும் சட்டமூலத்தை அரசாங்கம் முன்மொழிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

03_REVISED_RANIL_ST_175032f

Related posts: