படகு கவிழ்ந்து விபத்து – மண்டைதீவில் இளைஞன் பலி!

Thursday, March 21st, 2019

யாழ்ப்பாணம் மண்டைதீவு கடற்பரப்பில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மண்டைதீவை சேர்ந்த ஜோன் அன்ரனி டினேஷ் (வயது 19) என்ற இளைஞனே உயிரிழந்துள்ளார்.

குறித்த இளைஞன் நேற்று படகில் தனது நண்பரான மற்றுமொரு இளைஞனுடன் சென்று கடற்தொழிலில் ஈடுபட்டுக்கொண்டிருந்த வேளை கடலில் காற்றின் வேகம் அதிகரித்தமையால் படகு கவிழ்ந்துள்ளது.

அதனால் படகில் இருந்த இரு இளைஞர்களும் கடலில் நீந்தி கரை திரும்ப முற்பட்ட போதிலும், ஒருவர் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளார். மற்றையவர் நீந்தி கரை சேர்ந்துள்ளார்.

கடலில் மூழ்கி உயிரிழந்த மீனவரின் சடலத்தை சக மீனவர்கள் மீட்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைத்தனர்.

Related posts: