படகுப்பாதை அனர்த்தத்தின் பின்னரான புதிய பேருந்து சேவைக்கு எதிர்ப்பு!
Wednesday, November 24th, 2021கிண்ணியா – குறிஞ்சாக்கேணியில் இடம்பெற்ற படகுப்பாதை விபத்தை அடுத்து, இன்று (24) காலை முன்னெடுக்கப்படவிருந்த பேருந்து சேவைக்கு மக்கள் தொடர்ந்தும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
குறிஞ்சாக்கேணியிலிருந்து கிண்ணியாவிற்கு இன்று காலை முன்னெடுக்கப்படவிருந்த இலங்கை போக்குவரத்து பேருந்து சேவை, மக்களின் எதிர்ப்பினால் நிறுத்தப்பட்டுள்ளது.
குறித்த பேருந்து குறிஞ்சாக்கேணி பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த போது பொதுமக்களால் பேருந்து மறிக்கப்பட்டுள்ளது.
இதனால் பேருந்திலிருந்து பயணித்த பாடசாலை மாணவர்கள் உள்ளிட்டோர் மீண்டும் வீடு திரும்பியதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது..
000
Related posts:
மத்தள விமான நிலையத்தை பொறுப்பேற்க இந்தியா தீவிர ஆர்வம்!
தேசிய டெங்கு ஒழிப்பு விஷேட வேலைத்திட்டம் ஆரம்பம்!
லீசிங் நிலுவைகள் தொடர்பில் விசேட திட்டத்மொன்றை தயாரிக்குமாறு துறைசார் அதிகாரிகளுக்கு பிரதமர் அறிவுறு...
|
|