பச்சிளைப்பள்ளி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட செழிப்பான பார்வையில் அனைவருக்கும் பாதுகாப்பான குடிநீர் திட்டம் முன்னேற்றம் தொடர்பான கள விஜயம்!

Wednesday, June 28th, 2023

கிளிநொச்சி பச்சிளைப்பள்ளி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட  செழிப்பான பார்வையில் அனைவருக்கும் பாதுகாப்பான குடிநீர் செயற்றிட்டங்களின் முன்னேற்ற நிலைகளை கண்டறிவதற்காக மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவர்-கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் அறிவுறுத்தலுக்கு அமைவாக அவரது இணைப்பாளர் மற்றும் அலுவலக உத்தியோகத்தரால் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

பச்சிளைப்பள்ளி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட  பகுதிகளில் செழிப்பான பார்வையில் அனைவருக்கும் பாதுகாப்பான குடிநீர் செயற்றிட்டங்களின் கீழ்

நடைமுறைப்படுத்தப்பட்ட 08 நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் இதன்போது நேரடியாக சென்று பார்வையிட்டனர்.

இதன் போது நீர் சுத்திகரிப்பு நிலையங்களின் வேலைத்திட்டங்களில் காணப்பட்ட மந்தநிலை மற்றும் குறைபாடுகள் இனங்காணப்பட்டு அவற்றை நிவர்த்திசெய்வதற்கான யோசனைகள் அடங்கிய் முழுமையான அறிக்கை ஒருங்கிணைப்புக் குழு தலைவருக்கு சமர்பிக்கப்படவுள்ளது.

இதே போன்று இனிவரும் நாட்களில் மாவட்டத்தின் வளர்ச்சிக்காக நடைமுறைப்படுத்தப்பட்ட  ஏனைய பல செயற்றிட்டங்களை நேரில் பார்வையிட்டு ஒருங்கிணைப்புக்குழு தலைவருக்கு முழுமையான ஆய்வறிக்கை சமர்ப்பிக்கப்படுமென ஒருங்கிணைப்புக் குழு தலைவரின் இணைப்பாளர் இரத்தினம் அமீன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: