பசளை இறக்குமதியாளர்கள், ஒரு வாரத்திற்குள் தங்கள் கையிருப்புகளை சந்தைபடுத்த வேண்டும் – விவசாயத்துறை அமைச்சர் பிறப்பித்துள்ள உத்தரவு!
Tuesday, July 6th, 2021
இரசாயன பசளை இறக்குமதியாளர்கள் தாங்கள் பதுக்கி வைத்திருக்கும் பசளை கையிருப்புகளை சந்தைப்படுத்த வேண்டும் என விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே உத்தரவிட்டுள்ளார்.
இறக்குமதியாளர்கள் தற்போது ஒரு இலட்சம் மெட்ரிக் தொன் பசளைகளை சந்தைபடுத்தாமல் பதுக்கி வைத்திருப்பதாக அமைச்சர் கூறியுள்ளார்.
இந்தநிலையில் பசளை இறக்குமதியாளர்கள், ஒரு வாரத்திற்குள் தங்கள் கையிருப்புகளை சந்தைபடுத்த வேண்டும் என அமைச்சர் மஹிந்தானந்த உத்தரவிட்டுள்ளார்.
நாட்டில் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வரும் விவசாயிகளின் ஆர்ப்பாட்டங்களை அடுத்தே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்து.
Related posts:
பழிவாங்கல் தொடர்ந்தால் கடுமையான தொழிற்சங்க நடவடிக்கை : மின்சார சபை !
கடலட்டை செய்கையாளர்களை ஊக்குவிப்பது தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தீவிர முயற்சி – வேலணையில் நடைபெற்ற கூ...
நாடாளுமன்றுக்கு ஜனாதிபதி இரகசியமாக வரவில்லை - பதவியும் விலக மாட்டார் - இராஜாங்க அமைச்சரான காஞ்சன விஜ...
|
|
|


