நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்தால் குறித்த பகுதிகள் முன்னறிவிப்பின்றி முடக்கப்படும் – இராணுவத் தளபதி அறிவிப்பு!

Thursday, April 29th, 2021

கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்தால் குறித்த பகுதிகள் எந்தவித முன்னறிவிப்பின்றி முடக்கப்படும் என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அதேநேரம் நாட்டை முடக்குவதற்கான எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்..

அதேநேரம் பல நாள்களுக்குத் தேவையான அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்துவைத்துக்கொண்டு தயாராகயிருப்பது சிறந்தது என தெரிவித்துள்ள இராணுவத்தளபதி, எனினும் எதிர்வரும் நாட்களில் கண்டுபிடிக்கப்படவுள்ள நோயாளிகளின் எண்ணிக்கையே இதனை தீர்மானிக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

தாங்கள் மக்களை அச்சுறுத்த வேண்டிய அவசியமோ அல்லது உண்மையை மறைக்க வேண்டிய தேவையோ இல்லையென தெரிவித்துள்ள அவர், கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்தால் சிகிச்சை நிலையங்களை அதிகரிக்க இராணுவம் தயாராகவுள்ளதாகவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: