நேற்றைய தினமும் இருவர் கொவிட் தொற்றினால் உயிரிழப்பு!

Friday, April 9th, 2021

நாட்டில் நேற்றையதினம் இரண்டு கொவிட்-19 மரணங்கள் பதிவாகின. இதற்கமைய, நாட்டில் கொவிட்-19 தொற்றினால் மரணித்தோரின் எண்ணிக்கை 593 ஆக அதிகரித்துள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன், அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் யாழ்ப்பாணம் – கோண்டாவில் பகுதியச் சேர்ந்த 79 வயதான பெண் ஒருவர் நேற்று மரணித்தார்.யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றுவந்த நிலையில் அவர் மரணித்துள்ளார்.

இதேவேளை, தெஹிவளை பகுதியை சேர்ந்த 70 வயதான ஆண் ஒருவர் நேற்று மரணித்துள்ளார். கொழும்பு தெற்கு பேதனா வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வந்த நிலையில் அவருக்கு கொவிட்-19 தொற்றுறுதியானது. இதனை அடுத்து, தேசிய தொற்று நோயியல் நிறுவகத்திற்கு மாற்றப்பட்டதை அடுத்து அவர் மரணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது..

Related posts: