நேற்றுமுதல் அரச ஊழியர்களுக்கு 2500 ரூபா சம்பள அதிகரிப்பு!
Friday, July 26th, 2019கடந்த வரவு செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்ட அரச ஊழியர்களுக்கான 2500 ரூபா கொடுப்பனவு நேற்றுமுதல் மாதாந்த சம்பளத்தில் சேர்க்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு அறிவித்திருக்கிருக்கின்றது.
இந்த சம்பள அதிகரிப்புக்கென அரசாங்கம் 2700 மில்லியனுக்கும் அதிகமான நிதியை செலவிட்டிருக்கிறது.
2015 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது எதிர்வரும் ஜனவரி மாதத்தில் அரச ஊழியர்களின் அடிப்படைச் சம்பளம் 107 சதவீதத்தால் அதிகரிக்கும்.
இது ஜூலை மாதம் முதல் அமுலாகும். அரச ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்புக்கும் ஓய்வூதிய கொடுப்பனவுக்கும் ஆயிரம் பில்லியன் ரூபாவுக்கும் அதிகமான நிதி செலவிடப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
முன்னாள் நீதியரசர் சரத் அப்றூ மரணம்!
நாளைமுதல் நாடாளவிய ரீதியில் தினமும் இரவு 11 மணி முதல் மறுநாள் அதிகாலை 4 மணி வரை ஊரடங்கு அமுலில் இருக...
புதிய சுகாதார வழிகாட்டல்களை மக்கள் இறுக்கமாக கடைப்பிடிக்க வேண்டும் - சுகாதார தரப்பினர் வலியுறுத்து!
|
|