நேற்றுமுதல் அமுலுக்கு வரும் வகையில் நீர்க்கட்டண திருத்தம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியானது!

Thursday, August 3rd, 2023

நீர்க்கட்டணம் திருத்தம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. குறித்த நடைமுறையானது நேற்றுமுதல் அமுல்ப்படுத்தப்பட்டுள்ளதாக நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, வைத்தியசாலைகள், பாடசாலைகள், மதஸ்தலங்கள், சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சியாளர்கள் சமுர்த்தி பயனாளிகள், அஸ்வெசும பயனாளிகள் மற்றும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு நீர்க்கட்டண அதிகரிப்பு தாக்கம் செலுத்தாது என அறிவிக்கப்பட்டுள்ளது

அண்மையில் மின்சார கட்டணம் 66 சதவீதத்தால் அதிகரித்தமையே நீர்கட்டணம் அதிகரிப்பிற்கு காரணம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய, 0 முதல் 5 வரையான அலகொன்று 60 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் மாதாந்த கட்டணமாக 300 ரூபா அறிவிடப்படவுள்ளது.

அத்துடன், 06 முதல் 10 வரையான அலகொன்று 80 ரூபாவினால் அதிகரிக்கட்டுள்ளதுடன் மாதாந்த கட்டணமாக 300 ரூபா அறிவிடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: