நேரம் மாறுகின்றது: வட மாகாண மாணவர்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு !
Saturday, November 19th, 20162017ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 2ஆம் திகதி முதல் வடமாகாணத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளும் ஆரம்பிக்கும் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் இதன்படி, காலை 07.30 மணிக்கு பாடசாலைகளை ஆரம்பிக்கப்பட்டு பிற்பகல் 01.30 மணிக்கு முடிவடையும் என வடமாகாண கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, வட மாகாணத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளையும் சீராக ஒரே நேரத்தில் இயங்க செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு, அமைச்சினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
எனவே, வட மாகாணத்தில் இயங்கும் மாகாண மற்றும் தேசிய பாடசாலைகள் அனைத்தையும் 2017.01.02 முதல் காலை 07.30 மணி தொடக்கம் பிற்பகல் 01.30 மணி வரை நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
மகப்பேற்றுவைத்தியர் பற்றாக்குறையால் கிளிநொச்சிமுல்லைத்தீவுமாவட்டங்களில் கர்ப்பிணித்தாய்மார்கள் நெருக...
அதிபர்களுக்கு வழங்கப்படுகின்ற தலைமைத்துவ பயிற்சி தற்காலிகமாக இடைநிறுத்தம்!
2022 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலம் நிதி அமைச்சர் பசில் ராபக்ஷ நாடாளுமன்றத்தில் முன்வைப்பு!
|
|