நெடுந்தீவு – வேலணைப் பிரதேச செயலகங்களுக்கு ரூபா 11 மில்லியனில் 5 முக்கிய கருத்திட்டங்கள்!
Thursday, June 21st, 2018
ஒன்றிணைக்கப்பட்ட கிராம அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் நெடுந்தீவு – வேலணை ஆகிய இரு பிரதேச செயலகங்களுக்கு 11 மில்லியன் ரூபாயில் 5 முக்கிய எண்ணக்கருத்திட்டங்களுக்கு நிதி கிடைத்துள்ளன. இத்திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடுகள் தேசிய ஒருமைப்பாட்டுக்கும் நல்லிணக்கத்திற்குமான அமைச்சு மேற்கொண்டுள்ளதாக யாழ் மாவட்டச் செயலர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.
இதன்பிரகாரம் நெடுந்தீவு இறங்குதுறை கூரை அமைத்தலுக்கு 2 மில்லியனும் நெடுந்தீவு கிழக்கு உள்ளுர் உற்பத்தி விற்பனை நிலையம் அமைக்க 3 மில்லியனும் நெடுந்தீவு மேற்கு விவசாய கிணறு சீரமைக்க 2 மில்லியனும் ஒதுக்கப்பட்டுள்ளது. இதேவேளை வேலணை வண்ணாங்குளம் சீரமைக்க 2 மில்லியனும் வேலணை அம்பிகைநகர் மீனவர் இளைப்பாறு மண்டபம் அமைக்க 2 மில்லியனுமாக இரு பிரதேச செயலகத்திற்கும் 11 மில்லியன் ரூபா அபிவிருத்திக்காக கிடைத்துள்ளது.
Related posts:
தேர்தலை நடத்துவதற்கான சூழல் உருவாகி வருவதால் சுகாதாரத்துறை பரிந்துரையை வழங்க முடியும் - சுகாதார சேவை...
இலங்கையில் கொரோனா தொற்றில் இருந்து 4 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் குணமடைவு!
நாட்டின் பல பாகங்களில் பலத்த மழை வெய்யும் - வளிமண்டலவியல் எதிர்வுகூறல்!
|
|