நெடுந்தாரகை பணியாளர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்க வேண்டும்என கோரிக்கை!

Thursday, June 21st, 2018

குறிகாட்டுவான் – நெடுந்தீவுக்கான கடல் வழிப்போக்குவரத்தில் ஈடுபடும் நெடுந்தாரகைப் பயணிகள் படகில் பணியாற்றும் பணியாளர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

யாழ் நெடுந்தீவின் கடல் வழிப் போக்குவரத்துக்களில் ஈடுபட்டு வரும் நெடுந்தாரகை பயணிகள் படகில் படகைச் செலுத்துவதில் இருந்து ஏனைய பகுதிகளில் பணியாற்றுபவர்கள் கடற்படையைச் சேர்ந்தவர்களாகவுள்ளனர்.

இதேவேளை நெடுந்தீவுப் பிரதேசத்தைச் சேர்ந்த ஆறு பேர் பயணிகள் படகில வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளபோதும் நிரந்தர நியமனம் இதுவரை வழங்கப்படவில்லை என்றும் குறித்த ஆறு பேரும் தற்காலிக பணியாளர்களாகவே நீண்ட காலமாக பணியாற்றி வருகின்றனர்.

இவர்களுக்கான நிரந்தர நியமனம் இதுவரை வழங்கப்படவில்லை. இவர்களுக்கான நிரந்தர நியமனம் வழங்க நடவடிக்கை எடுக்குமாறும் பல்வேறு தரப்பினர் கோரியுள்ளனர்.

அத்துடன் இப் படகு சேவையில் முழுமையான சுத்திகரிப்பு இதுவரை மேற்கொள்ளப்படவில்லை என்றும் சிறிய சிறிய திருத்தங்கள் மாத்திரமே மேற்கொள்ளப்படுவதாகவும் இவ்வாறு முழுமையான சுத்திகரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டுமெனவும் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related posts: