நுவரெலியா கால்டன் முன்பள்ளியில் இடம்பெற்ற நத்தார் கரோல் கீத கலை நிகழ்வில் பிரதமர் கலந்து சிறப்பிப்பு!

Saturday, December 18th, 2021

நுவரெலியா கால்டன் முன்பள்ளியில் நடைபெற்ற நத்தார் கரோல் கீத கலை நிகழ்வில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கலந்து சிறப்பித்துள்ளார்

கலை நிகழ்வில் கலந்துகொண்ட முன்பள்ளி மாணவர்கள் மிகவும் இனிமையாக கரோல் கீதம் இசைத்தனர்.

நத்தார் கரோல் கீதம் இசைத்த கால்டன் முன்பள்ளி மாணவர்களுடன் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நத்தார் சந்தோஷத்தை பகிர்ந்துக் கொண்டார்.

கால்டன் முன்பள்ளியின் அதிபரும் பணிப்பாளருமான பிரதமரின் பாரியார் திருமதி.ஷிரந்தி விக்ரமசிங்க ராஜபக்ஷ கலை நிகழ்வின் நிறைவில் மாணவர்களுக்கு பரிசுப்  பொருட்களை வழங்கிவைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: