தேசிய மட்டத்தில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்கு பாதுகாப்பாக இருப்போம் டிஜிட்டல் தீர்வை அறிமுகப்படுத்த நடவடிக்கை!

Saturday, November 21st, 2020

இலங்கை தகவல் தொடர்பாடல் மற்றும் தொழிநுட்ப முகவர் நிலையயத்தினால் (ICTA) இலங்கையில் கொவிட் – 19 வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக நாட்டு பிரஜைகளின் பயணங்களை முகாமைத்துவம் செய்யும் நோக்குடனான இணையத்தள தொழில்நுட்பத்தை அடிப்படையாக கொண்டு ‘பாதுகாப்பாக இருப்போம்’ (Stat Safe) என்ற டிஜிட்டல் தீர்வை அறிமுகப்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் செயலாளர் பி.பி ஜயசுந்தரவினால் அமைச்சின் செயலாளர்கள், இராஜாங்க அமைச்சின் செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள், திணைக்களங்களின் பிரதானிகள், அரச கூட்டுத்தாபனம், நிதி சபைகளின் தலைவர்கள் ஆகியோருக்கு அனுப்பி வைத்துள்ள சுற்று நிருபத்தில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போதைய நிலைமைக்கு மத்தியில் கொவிட் – 19 வைரஸ் தொற்றுக்குள்ளானவரின் நடமாட்டம் மற்றும் அவர்களுடன் தொடர்புப்பட்டவர்களை இனங்காணுதல் ,ஆரோக்கியமானவர்கள் சுதந்திரமாக பயணங்களை மேற்கொள்வதற்கான சந்தர்ப்பத்தை பெற்றுக்கொடுத்தல் போன்ற இரண்டு அடிப்படை விடயங்களில் இதில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

அத்தோடு, ‘பாதுகாப்பாக இருப்போம்’ என்ற டிஜிட்டல் தீர்வு ஊடாக இந்த எதிர்பார்ப்பை நிறைவேற்றுவதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பான மேலதிக விபரங்களையும், பதிவுகளையும் www.staysafe.gov.lk என்ற இணையதளத்தின் மூலம் மேற்கொள்ள முடியும் என்றும் அந்த சுற்றுநிருபத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விபரங்களுக்கு திரு. கசுன் தாரக்க (076 8254047), திரு. சாமேந்திர பெரேரா (071 8327380), திரு. திலின திசாநாயக்க (077 2954866) ஆகியோருடன் தொடர்பு கொண்டு விபரங்களை பெற்றுக்கொள்ள முடியும். அல்லது hello@staysafe.gov.lk    என்ற மின்னஞ்சல் மூலமும் தொடர்பு கொண்டு விபரங்களை பெற்றுக்கொள்ள முடியும் என்றுமு; தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: