நீதிபதியின் மெய்பாதுகாவலரின் குடும்பத்துக்கு இரங்கல் தெரிவித்தார் பிரதமர்

Monday, July 24th, 2017

நல்லூர் பகுதியில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் யாழ்.மேல்.நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனின் மெய்பாதுகாவலரான பொலிஸ் சார்ஜன்ட் ஹேமசந்திர என்பவர் உயிரிழந்த சம்பவத்துக்கு, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அனுதாபம் தெரிவித்துள்ளார்.

“பணியிலிருக்கும் போது, சார்ஜன்ட் உயிரிழந்துள்ளமை சோகத்துக்குரிய விடயமே. இந்தக் கடினமான நேரத்தில், உயிரிழந்தவரின் குடும்பத்தாருக்கு, ஆழந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன்” என்று, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

Related posts:


எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதிக்கு முன்னர் விமான நிலையம் திறக்கப்பட வாய்ப்பு - இந்தியத் தூது...
சுகாதார சட்டங்களை மீறி செயற்படும் பிரதேசங்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்குமாறு அரசாங்க வைத்திய அத...
யாழ்ப்பாணத்தில் இலவச கண்புரை சத்திரசிகிச்சை தொடர்பில் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் கேதீஸ்வரன...