நீதிபதியின் முறைப்பாடு குறித்து பிரதம நீதியரசருடன் பேச்சு!
Monday, October 3rd, 2016மேல் நீதிமன்ற நீதிபதி சிரான் குணரட்னவின் தொலைபேசி உரையாடல்கள் ஒட்டுக் கேட்கப்பட்டதாகவும், மின்னஞ்சல் தகவல்கள் இரகசியமாக பார்க்கப்பட்டதாகவும் குற்றம் சுமத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் நீதிபதி சிரான் குணரட்ன, இலங்கை மேல் நீதிமன்ற நீதிபதிகளின் சங்கத்தில் எழுத்து மூலம் முறைப்பாடு செய்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் இணையத்திலும் சில ஊடகங்களிலும் வெளியான தகவல்களையும் அவர் இந்த முறைப்பாட்டுடன் இணைத்துக்கொண்டுள்ளார். தமது தொலைபேசி உரையாடல்கள் ஒட்டு கேட்கப்பட்டதாகவும் மின்னஞ்சல் கணக்கு ஊடறுக்கப்பட்டுள்ளதாகவும குற்றம் சுமத்தியுள்ளார்.
இந்த முறைப்பாடு தொடர்பில் பிரதம நீதியரசர் கே.சிறிபவனுடன் எதிர்வரும் 1ஆம் திகதி கலந்துரையாடவுள்ளதாக, மேல் நீதிமன்ற நீதிபதிகள் சங்கம் அறிவித்துள்ளது. இந்த முறைப்பாடு தொடர்பில் நீதிபதி சிரான் குணரட்ன எடுக்கும் எந்தவொரு நடவடிக்கைக்கும் பூரண ஒத்துழைப்பு வழங்குவதாக மேல்நீதிமன்ற நீதிபதிகள் சங்கம் உறுதியளித்துள்ளது.
Related posts:
|
|