நீண்ட நாள்களுக்கு பின்னர் யாழ்- காங்கேசன்துறை – வவுனியா இடையேயான தினசரி புகைரத சேவை ஆரம்பம்!

Monday, July 26th, 2021

அதன்படி இன்று அதிகாலை 5.15 மணிக்கு காங்கேசன்துறையிலிருந்து சேவையை முன்னெடுத்த புகையிரதம் காலை 8.07 மணிக்குச் வவுனியாவை சென்றடைந்த நிலையில் , இன்று மாலை 5 மணிக்கு வவுனியாவிலிருந்து காங்கேசன்துறை நோக்கி தனது பயணத்தை ஆரம்பிக்கும் என யாழ்.புகைரத நிலையத்தின் பொறுப்பதிகாரி கூறியுள்ளார்.

சாதாரண வகுப்பு தொடருந்து சேவையாக நடைபெறும் இதன் கட்டணமாக யாழ்ப்பாணத்திலிருந்து கிளிநொச்சிக்கு 60 ரூபாயும், மாங்குளத்துக்கு 120 ரூபாயும் வவுனியாவுக்கு 160 ரூபாயும் கட்டணமாக அறவிடப்படுகிறதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தினமும் அதிகாலை 5.15 மணிக்கு காங்கேசன்துறையிலிருந்தும் அதிகாலை 5.45 மணிக்கு யாழ்.மத்திய புகைரதர நிலையத்திலிருந்தும், நாவற்குழி, கொடிகாமம் நிலையங்களில் தரித்து கிளிநொச்சி புகைரத நிலையத்தைச் சென்றடையும்.

காலை 6.53 மணிக்கு கிளிநொச்சியிலிருந்தும் காலை 7.22 மணிக்கு மாங்குளத்திலிருந்தும் புறப்படும் புகைரதம் காலை 8.07 மணிக்கு வவுனியா புகைரத நிலையத்தைச் சென்றடையும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேநேரம் மாலை 5 மணிக்கு வவுனியாவிலிருந்து காங்கேசன்துறை நோக்கிப் பயணத்தை ஆரம்பிக்கும் என்றும் யாழ்ப்பாணம் புகையிரத நிலைய பிரதான அதிபர் பிரதீபன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, மாகாணங்களுக்கு இடையேயான பயணத்தடை உள்ள நிலையில் அரச, தனியார் மற்றும் வங்கி ஊழியர்களின் நலன்கருதி இந்த சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts: