ஐ. நா சபையின் வதிவிட பிரதிநிதி மார்க்-ஆன்ட்ரே பிரான்சே – முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சந்திப்பு!

Sunday, September 24th, 2023

ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட பிரதிநிதி மார்க்-ஆன்ட்ரே பிரான்சே மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆகியோருக்கு இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்ற இந்த கலந்துரையாடலில் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் மதுர விதானகே ஆகியோரும் கலந்துகொண்டனர்.

இதன்போது, ஐநா இலங்கையில் முன்னெடுத்துவரும் சில பணிகள் மற்றும் எதிர்கால செயல்பாடுகள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: