இலங்கைக்கான அவுஸ்ரேலிய உயர்ஸ்தானிகர் பிறைசி ஹட்ஸன் தலைமையிலான குழுவினர் யாழ். வருகை!
Thursday, January 19th, 2017
இலங்கை அரசாங்கத்தின் நல்லிணக்கச் செயற்பாடு தொடர்பில் ஆராயும் நோக்கில் இலங்கைக்கான அவுஸ்ரேலிய உயர்ஸ்தானிகர் பிறைசி ஹட்ஸன் தலைமையிலான பத்துப் பேர் அடங்கிய குழுவினர் இன்று வியாழக்கிழமை(19) கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்குப் புகையிரதத்தில் பயணமாகி வருகை தந்துள்ளனர்.
இலங்கை அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படுகின்ற சமாதானம், இனங்களுக்கிடையிலான புரிந்துணர்வுச் செயற்பாடுகள் மற்றும் நல்லிணக்கம் தொடர்பாக உரிய அதிகாரிகள் மற்றும் பொதுமக்களுடன் கலந்துரையாடும் நோக்கில் இந்தக் குழுவினர் முதல் முறையாக ரயிலில் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
Related posts:
தமிழ் மக்களின் அபிலாஷைகளை நிவர்த்தி செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் - இந்திய வெளிவிவகார ...
இந்திய புலமைப்பரிசில் திட்டம் - 2023 - 2024 கல்வி ஆண்டுக்கான விண்ணப்பம் கோரல்!
யாழ்.நகரில் சுற்றுலா பயணிகளையும், பொதுமக்களையும் அசௌகயப்படுத்தும் யாசகா்கள் – நடவடிக்கை எடுக்குமாறு ...
|
|