சாதாரண தரம் கூட சித்தியடையாதொருக்கு விளையாட்டு ஆலோசகர் பதவி ஆசிரியர் சங்கம் குற்றச்சாட்டு!
Wednesday, December 28th, 2016
ஜி.சீ.ஈ சாதாரணதரப் பரீட்சையில் சித்தி பெறாதவர்களும் அரச பாசாலைகளில் விளையாட்டு ஆலோசகர்களாக நியமனம் செய்யப்பட்டிருப்பதாக இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.
அரச பாடசாலைகளில் எந்தவொரு தொழிலிலும் நியமிக்கப்பட வேண்டியவர்கள் குறைந்தது ஜி.சீ.ஈ சாதாரணதரப் பரீட்சையில் சித்தி பெற்றிருக்க வேண்டும் என்பது கல்வியமைச்சின் அடிப்படைக் கொள்கையாக இருந்தபோதிலும் அண்மையில் நடந்த விளையாட்டு ஆலோசகர் நியமனங்களில் இந்தக்கொள்கை முற்றாக மீறப்பட்டிருந்ததாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதம செயலாளர் ஜோசப் ஸ்ராலின் தெரிவித்துள்ளார். நாடு முழுவதிலும் உள்ள அரச பாடசாலைகளுக்கு 3ஆயிரம் விளையாட்டு ஆலோசகர்களை நியமிக்க கல்வியமைச்சு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Related posts:
அரிசி கொள்வனவில் ஊழல்: கணக்காய்வாளர் அறிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படாதது ஏன்?
செலவுக் குறைப்பிலிருந்து திறைச்சேரிக்கு 53 பில்லியன் ரூபா வருவாய் - அத்தியாவசிய உணவு – மருந்து பொருட...
யாழ்ப்பாண சிறைச்சாலையில் "காத்திருப்போர் மண்டபம்" திறந்து வைப்பு!
|
|