குளங்கள் வான் பாய்வதனால் கிளிநொச்சியில் பல பிரதேசங்களின் போக்குவரத்து பாதிப்பு!

Sunday, January 17th, 2021

கிளிநொச்சி- கரியாலை நாகபடுவான் குளம் மற்றும் ஜெயபுரம், பல்லவராயன் கட்டு குளம் ஆகியன தொடர்ந்து வான் பாய்வதனால் வேரவில் கிராஞ்சி வலைப்பாடு உள்ளிட்ட கிராமங்களுக்கான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக பெய்த கன மழையினால் குளங்கள் நிரம்பி வெளியேறும் அதிகளவான வெள்ளநீர், வேரவில் கிராஞ்சி வீதியிலேயே காணப்படுகின்றது.

மேலும் இரண்டு இடங்களில் நான்கு அடிக்கு மேல் வெள்ள நீர் பாய்ந்த வண்ணம் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை கடந்த ஆறு நாட்களுக்கு மேலாக இவ்வீதியூடான பேருந்து போக்குவரத்துச் சேவைகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

குறிப்பாக இந்தப் பிரதேசத்தில் உள்ள மக்களது போக்குவரத்து தேவைகளை கருதி, பூநகரி பிரதேச சபையினால் உழவு இயந்திரத்தில் பயணிகளை ஏற்றி, இறக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:


அனைத்து அரச வைத்தியசாலைகளிலும் உள்ள மொத்த நோயாளர் கட்டில்களில் 50 சதவீத கட்டில்களை கொவிட் நோயாளர்களு...
செலவின சட்டமூலம் இன்று நிறைவேறுமாயின் தேர்தல் ஒத்திவைக்கப்படலாம் - பெப்ரல் அமைப்பு தெரிவிப்பு!
ஸ்ரீலங்கன் விமான சேவையின் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்திற்கு பொருத்தமான முதலீட்டாளரைத் தெரிவு செய்வதற்...