நிறைவுக்கு வந்தது வைத்தியசாலை ஊழியர்கள் வேலை நிறுத்தத்தப் போராட்டம்!

Thursday, August 5th, 2021

சுகாதார தொழிற்சங்கங்கள் முன்னெடுத்திருந்த 4 மணி நேர வேலை நிறுத்தத்த போராட்டம் நிறைவுக்கு வந்துள்ளது.

ஒப்பந்தங்கள் குறித்து தொழிற்சங்கங்களிடையே உடன்பாடு  எட்டப்பட்டுள்ளதால் தொழிற்சங்க நடவடிக்கையை இடைநிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இன்று காலை 7.00 மணிக்கு ஆரம்பமான வேலைநிறுத்தம் காலை 11.00 மணியளவில் நிறுத்தப்பட்டது.

முன்பதாக கொவிட் -19 அபாய கொடுப்பனவு தொடர்ந்து வழங்குவது உட்பட பல 6 கோரிக்கைகளை முன்வைத்து நாடளாவிய ரீதியில் உள்ள வைத்தியசாலைகளில் சுகாதார ஊழியர்களால் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது

00

Related posts: