நிபுணத்துவம் மிக்கவர்களின் பற்றாக்குறை அபிவிருத்திகளுக்குத் தடையாக உள்ளது – ஜனாதிபதி!

Saturday, June 2nd, 2018

தேசிய பொறியியலாளர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களின் பற்றாக்குறை நாட்டின் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டங்களுக்கு தடையாக உள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கல்விமான்கள் நாட்டை விட்டு வெளிநாடுகளுக்கு சென்றுவிடுவது இதற்கு காரணமாக உள்ளது என்றும் தாய் நாட்டுக்கான தங்களது பொறுப்புக்கள் குறித்த தெளிவுடன் அவர்கள் செயற்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

பொறியியல் மத்திய ஆலோசனை பணியகத்தின் 45 ஆவது ஆண்டு நிறைவு விழா நேற்று முன்தினம் பிற்பகல் பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

நாம் எமது மரபுகளையும் பாரம்பரியங்களையும் பேணி முன்னேற்றத்தை நோக்கி பயணிக்க வேண்டும். இலங்கை பொறியியலாளர்களின் திறமை, இயலுமைகள் மற்றும் ஆக்கத் திறன்களை மிகச் சிறப்பாக வெளிப்படுத்த கடந்த 45 வருட காலப்பகுதியில் பொறியியல் மத்திய ஆலோசனை பணியகம் குறிப்பிடத்தக்க பங்களிப்பை செய்திருப்பதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

Related posts: