நிதி மாநாட்டுக்குஅமைச்சர் ரவி ஆளுனர் இந்திரஜித் வோஷிங்டன் பயணம்!
Monday, October 3rd, 2016
பொதுநலவாய அமைப்பு, சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி ஆகியன இணைந்து நடத்தும்மாநாட்டில் கலந்துகொள்வதற்கு நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க இந்தவாரம் வாஷிங்டன் செல்லவுள்ளார்.
அவருடன், நிதியமைச்சின் செயலாளர்; ஆர் எச் எஸ் சமரதுங்க மற்றும் மத்திய வங்கியின்ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி ஆகியோரும் அமெரிக்கா செல்கின்றனர்.
எதிர்வரும் புதன்கிழமையன்று பொதுநலவாய நாடுகளின் மத்திய வங்கி ஆளுநர்களி;ன் மாநாடுநடைபெறவுள்ளது. இதனையடுத்து 7 முதல் 9ம் திகதிவரை, சர்வதேச நாணய நிதியத்தின் பணிப்பாளர் சபைஅமர்வு இடம்பெறவுள்ளது. இதில், அமைச்சர் ரவி கருணாநாயக்க பங்கேற்கவுள்ளார்.
Related posts:
விரைவில் அமுலுக்கு வருகின்றது நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஒழுக்கக் கோவை?
ஒரு நாள் சேவை ஊடாக பரீட்சை சான்றிதழ் வழங்கும் நடவடிக்கை இடைநிறுத்தம் - பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அற...
வங்கி சேவைகள் இன்று வழமைபோன்று இடம்பெறும் – இரு தினங்கள் சகல மதுபானசாலைகளும் மூடப்படும் எனவும் அறிவி...
|
|