நிதி மற்றும் வெளிநாட்டு ஏற்றத்தாழ்வுகள் காரணமாக இலங்கையின் பொருளாதாரக் கட்டமைப்பு நிச்சயமற்றதாக உள்ளது – உலக வங்கி கவலை!

Monday, April 18th, 2022

தாங்க முடியாத கடன் மற்றும் கொடுப்பனவு சமநிலை சவால்களை இலங்கை எதிர்கொண்டுள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.

நிதி மற்றும் வெளிநாட்டு ஏற்றத்தாழ்வுகள் காரணமாக இலங்கையின் பொருளாதாரக் கட்டமைப்பு மிகவும் நிச்சயமற்றதாக உள்ளதாகவும் உலக வங்கி கூறுகிறது.

உயர்மட்ட கடன் மற்றும் கடன் சேவைகளை நிவர்த்தி செய்வதற்கும், நிதிப் பற்றாக்குறையைக் குறைப்பதற்கும், வெளிப்புற ஸ்திரத்தன்மையை மீட்டெடுப்பதற்கும், ஏழைகள் மற்றும் பாதிக்கப்படக்கூடியவர்களுக்கு ஏற்படும் பாதகமான விளைவுகளைத் தணிப்பதற்கும் அவசரக் கொள்கை நடவடிக்கை தேவை என்று உலக வங்கி குறிப்பிட்டுள்ளது.

உலக வங்கி ஆண்டுக்கு இருமுறை வெளியிடும் அறிக்கையில், பிராந்திய நிலவரத்தை மேம்படுத்தும் வகையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெற்காசியாவில் உள்ள நாடுகள் ஏற்கனவே பொருட்களின் விலை உயர்வு, விநியோக பற்றாக்குறை ஆகியவற்றால் போராடி வருகின்றன.

மாலைதீவுகள், நேபாளம் மற்றும் இலங்கைக்கான உலக வங்கியின் பணிப்பாளர் Faris Haddad-Servos இது தொடர்பாக தெரிவிக்கையில்,“இலங்கையின் நிச்சயமற்ற பொருளாதாரக் கண்ணோட்டம் மற்றும் மக்கள் மீதான அதன் தாக்கம் குறித்து உலக வங்கி ஆழ்ந்த கவலை கொண்டுள்ளது என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: