நிதி அமைச்சு சில வரிகளை அதிகரிக்கலாம் என்பதால் சில பொருட்களின் விலைகளும் அதிகரிக்க வாய்ப்பு – மத்திய வங்கியின் ஆளுநர் தெரிவிப்பு!

Saturday, October 7th, 2023

நிதி அமைச்சு சில வரிகளை அதிகரிக்கலாம் என்பதால் சில பொருட்களின் விலைகளும் அதிகரிக்கலாம் என மத்திய வங்கியின்  ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.  

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கை குறித்த ஆய்வு ஒக்டோபர் மாதத்திற்குள் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அத்து;டன் கடன்மறுசீரமைப்பு நடவடிக்கைகளும் அதற்கு சமாந்திரமாக இடம்பெறும்.

கடன் மறுசீரமைப்பு தொடர்பில் இந்தியா பரிஸ் கிளப் சீனா ஆகிய நாடுகள் பெரும் ஆதரவை வழங்கியுள்ளன. சில விடயங்களிற்கு தீர்வை கண்டதும் பணியாளர் மட்ட உடன்பாடு சாத்தியமாகலாம்.

நிதியமைச்சு சில வரிகளை அதிகரிக்கலாம் என்பதால் சில பொருட்களின் விலைகளும் அதிகரிக்கலாம்  என தெரிவித்துள்ளார்.

இதேவேளை வங்கிகள் விதிக்கும் வட்டி விகிதத்தை உடனடியாக குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: