நிதியமைச்சின் மௌனம் தொடர்பில் நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபை குற்றச்சாட்டு!
Wednesday, December 21st, 2016உள்ளூர் சந்தையில் கண்மூடித்தனமாக அதிகரித்துவரும் அரிசி விலைகள் பற்றியோ அதனைக் கட்டுப்படுத்துவது பற்றியோ நிதியமைச்சு இதுவரை தங்களுக்கு எந்தவிதமான அறிவித்தலையும் தரவில்லையென நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்திருக்கிறது.
உள்ளூர்ச் சந்தையில் அரிசியின் கட்டுப்பாட்டு விலைகள் பற்றி எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாததால் வியாபாரிகள் தங்களது இஷ்டத்துக்கு விலைகளை உயர்த்தி வருவதாகவும் அதனால் பொதுமக்கள் திக்குமுக்காடி வருவதாகவும் அச்சபையின் உயரதிகாரியொருவர் விசனம் தெரிவித்தார். கட்டுப்பாட்டு விலைகளை நிர்ணயம் செய்வது நிதியமைச்சின் பொறுப்பாகும் எனவும், அவ்வாறு செய்யாத பட்சத்தில் தங்களால் எவ்வித நடவடிக்கையையும் மேற்கொள்ள முடியாதெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
Related posts:
கூட்டமைப்பினர் குழப்பங்களை ஏற்படுத்தியிருந்தபோதிலும் நாடாளுமன்றில் அமைதியாக நிதானத்துடன் உரையாற்றினா...
77,222 பேருக்கு டெங்கு நோய் தொற்று!
மின்சாரத் தடைக்கான காரணத்தை ஆராய அமைச்சர்கள் அடங்கிய குழு நியமனம்!
|
|